உயிரும் உடைமையும்.
எங்கிருந்து வரும் எதிலிருந்து வரும்
என்று அறிந்தவனில்லை,
அது
எங்கே செல்லும் எப்படி செல்லும்
அதை புரிந்தவனுமில்லை,
தன்னுடையதென சொந்தம் கொன்டாட
மறப்பதும் இல்லை,
அதற்காக
கொலையும் செய்ய
மனம் மறுப்பதில்லை,
இதில்
ஒன்றின்றி ஒன்று
நிலைப்பதுமில்லை,
நிலைப்பதில்
எந்த பயனும் இல்லை…..