ViNo எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

நெஞ்சு விரும்புதில்லையே !!!….

 

நெஞ்சு விரும்புதில்லையே !!!….


பஞ்சு தலையணைகளை நெஞ்சு விரும்புதில்லையே,

வாழ வழி இல்லா மக்கள் இங்கு,

நாற்றம் வீசு நடைபாதைகளை

வழி மறித்து வாழ்க்கை நடத்துகையிலே.

ViNo எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

பாலா(ழா)ய்ப் போகும் பணம்:

பாலா(ழா)ய்ப் போகும் பணம்:

கஞ்சிக்கும் வழியின்றி தன்

குடும்பம் கதறும் சத்தம் கேட்டும்

கேளாமல்

‘கட் அவுட்’டிற்கு

பாலாபிஷேகம் செய்கிறான்,

தன்னை அறியாத தலைவனுக்காக

தன் தலை விதி

மறந்தே!!!!!!!

பாழாய் போகிறதே

மூடணின் பணம்

பாலாய்

போகிறதே!!!!!!!!!!!!!

மகான்களுக்கும் மந்திரிகளுக்கும்.

மாட்டிக் கொள்ளும் வரை தான்

மதிப்பும் மரியாதையும்,


மகான்களுக்கும் மந்திரிகளுக்கும்…

ViNo எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

உயிரும் உடைமையும்.

உயிரும் உடைமையும்.

எங்கிருந்து வரும் எதிலிருந்து வரும்
என்று அறிந்தவனில்லை,
அது

எங்கே செல்லும் எப்படி செல்லும்
அதை புரிந்தவனுமில்லை,
தன்னுடையதென சொந்தம் கொன்டாட
மறப்பதும் இல்லை,
அதற்காக
கொலையும் செய்ய
மனம் மறுப்பதில்லை,
இதில்
ஒன்றின்றி ஒன்று
நிலைப்பதுமில்லை,
நிலைப்பதில்
எந்த பயனும் இல்லை…..

ViNo எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

கையில் ஆயுதம் ஏந்தி வாடி!!

கையில் ஆயுதம் ஏந்தி வாடி!!

கொள்கைகள் கொட்டிக் கிடக்குதிங்கு கோடி

கடைப்பிடிக்க ஒருத்தனும் இல்லை போடி;

உரிமை என்றால் உரக்க குரல் கொடுக்குறான்டி,

கடமை என்றால் கடையினில் ஓடி ஒழியுறான்டி;

ஈழத்தின் இடுப்பை ஒருவன் ஒடிக்குறான்டி,

தாயகம் திரும்புவோரை இவன் ஏளனமாய் நடத்துறான்டி;

நாளொரு கட்சி இங்கு தோன்றுதடி,

நாகரிகம் அறியாதவனெல்லாம் அதில் தலைவனான்டி;

ஆட்சியை அமைக்க ஆயிரம் சொல்லுறான்டி ,

அமைந்ததும் அதில் எதை இவன் செய்யுறான்டி?

அரசியல் உலகின் அடிப்படையாய் திரைத்துறையாச்சுதடி,

வருகிறவனெல்லாம் மக்களிடம் நல்லாவே நடிக்கிறான்டி…

வரி செலுத்த எல்லாரும் வரமாட்டேன்கிறான்டி ,

விலைவாசி விவசாயி முதுகெலும்பை முறிக்குதான்டி;

‘கடவுள்’ கதை சொல்பவன் கால்களில் விழுகிறான்டி,

சாதகம், சோதிடம்னு சிக்கி அழியுறான்டி;

எதையும் யோசிக்கவே யோசிக்கிறான்டி,

சோதிடனின் யோசனை மட்டும் யாசிக்கிறான்டி;

‘மூடன்’ என்றால் முறைக்குறான்டி

பகுத்தறி(வு) என்றால் பகைக்குறான்டி;

என்றும் இவன் திருந்தமாட்டான்டி

திருடர் கூட்டம் இவனை திருந்த விடமாட்டான்டி;

புதியதோர் உலகம் படைத்திட நீ வாடி!


திருடர் கூட்டம் தீயில் கருகிட, கையில்

ஆயுதம் ஏந்தியே நீ வாடி!!!..

ViNo எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானோ??!

நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானோ??!

தூணிலும் இருப்பான்!

சிறு துரும்பிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு ,

ஏனடா வணங்குவதற்காக, ‘சிலைகள்’ வடித்தாய் ??????

முட்டாள் மானிடா!!!!….

உன்னிலும் இருப்பான்!

உன் கண்ணிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு,

ஏனடா கடவுளுக்காக, ‘கோவில்கள்’ கட்டினாய்??????

குருட்டு மானிடா!!!!…

ஒரு வேளை………

“நீ சொன்னதெல்லாம் பொய்”

என்று நிரூபிக்க தானோ??!!

ViNo எழுதியவை | ஆகஸ்ட் 23, 2007

தென்காசி படுகொலை..

தென்காசி படுகொலை..

மதக் கலவரங்களை இந்த மண்ணின் மைந்தர்கள்

மறந்து விட்டனர்;

துறந்து விட்டனர்;

சாட்சிக்கு…….

தென்காசி படுகொலை உங்கள் காட்சிக்கு.

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.